இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Monday 29 November, 2010

குமுதம் எல்லாம் நம்மள... ஹி ஹி

நெட்டில் ஒருவர் மீது ஒருவர் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காகவே நிறைய சைட்டுகள் இருக்கிறதாமே? - ராஜிராதா, பெங்களூர்
ஒருவர் மீது ஒருவர் அல்ல, ஒருவர் மீது மட்டுமே எதிர்ப்பைத் தெரிவிக்கும் நிறைய சைட்டுகள் இருக்கின்றன. அவர் தமிழக முதல்வர். சாலையில் நார் மீதாவது காகம் எச்சம் போட்டுவிட்டால் கூட “என்ன ஆட்சி இது. காகம் எச்சம் போடுகிறது” என்று எரிந்து விழுகிறார்கள். [அரசு பதில்கள், குமுதம் 24.11.2010]
அடிச்சான் பாருய்யா ஒரே கல்லுல ரெண்டு மாங்கா! வலையுலகம் குமுதத்தை விமர்சனம் செய்த காலமெல்லாம் போய் குமுதம் வலையுலகைக் கேலி செய்யிற நெலைமை வந்திருச்சு பாருங்க. அதோட சேத்து முதலமைச்சருக்குப் பொன்னாடையும் போத்திருச்சுங்களே, பண்ணாடைங்க.

கொஞ்ச நாள் முந்தி குமுதத்துல ஒரு காக்கா தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மேலயே எச்சம் போட்டுக்கிட்டிருந்துச்சு. அந்த எச்ச காக்கா இப்போ கல்கில எழுதுது. இதையெல்லாம் வசதியா மறந்துடுறானுங்க. வாய்ல வடையிருக்கிற காக்காயத் தான இவனுங்க காக்கா புடிப்பானுங்க. புடிக்கட்டும் புடிக்கட்டும்.

Thursday 25 November, 2010

ரெட்டி போய் செட்டி, செட்டி போய் மறுபடியும் ரெட்டி

ஆந்திராவில் ஒரு ச்சீ... த்தூ... ஜாதி பாலிடிக்ஸ்

ஆந்திர முதல்வர் ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்ததை அடுத்து ரோசையா என்கிற குனிசெட்டி ரோசையா ஆந்திர மாநிலத்தில் 15ஆவது முதலமைச்சர் ஆனார். ஒய்.எஸ்.ஆர். உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னரே அவரது மகன் ஜகன் மோகன் ரெட்டியை முதலமைச்சராக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் ஒய். எஸ். ஆர்.  அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த மூத்த அரசியல்வாதி ரோசையாவுக்கு முதல்வர் பதவியைத் தந்தது காங்கிரஸ் தலைமை.

பதவியேற்ற நாள் முதல் இவர் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்க நேர்ந்தது. 2009ம் ஆண்டின் இறுதியில் தெலங்கானா தனி மாநிலம் அமைய வலியுறுத்தி நடைபெற்ற போராட்டங்களை இவர் சரியாகக் கையாளவில்லை என்ற விமர்சனமும் இருக்கிறது. வெகு சமீபத்தில் இவரது உடல்நிலை மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க வேண்டிய அளவுக்கு ஸ்திரமற்ற நிலைக்குச் சென்றது. மருத்துவமணையிலிருந்து திரும்பிய ரோசையா சோனியா காந்தி மீதான ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சனின் விமர்சனத்துக்குக் கண்டணம் தெரிவித்து நடந்த போராட்டங்களிலும் கலந்து கொண்டார். முதலமைச்சர் முன்னிலையிலேயே சுதர்சனின் கொடும்பாவி எரிக்கப்பட்டதும் விமர்சனத்துக்கு உள்ளானது.

மறைந்த ஒய்.எஸ். ஆர். மகன் ஜகன் மோகன் ரெட்டி தன் தந்தையின் மறைவை ஒட்டி அதிர்ச்சி தாளாமல் உயிரிழந்தவர்கள் மற்றும் தற்கொலை செய்து கொண்டவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் சொல்வதற்காகத் தொடங்கிய “ஓதார்ப்பு யாத்திரை”யும் (ஆறுதல் யாத்திரை) ரோசையாவுக்குத் தலைவலியும் திருகுவலியுமாக வந்து சேர்ந்தது.

தொடக்கத்தில் சிக்கலின்றி தான் போய்க் கொண்டிருந்தது ஓதார்ப்பு யாத்திரை. ஆறுதல் சொல்கிறேன் என்று தெலங்கானா பகுதி மாவட்டங்களில் ஜகன் என்றைக்குக் கால் வைத்தாரோ அன்றைக்குத் தொடங்கியது சிக்கல். ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசமே நீடிக்க வேண்டும் என்ற கருத்தை உடையவர் ராஜசேகர ரெட்டி. ராஜசேகர ரெட்டியை முன்னிறுத்தி நடக்கும் இந்த யாத்திரையைத் தெலங்கானா பகுதியில் நடத்த விட மாட்டோம் என்று முட்டுக் கட்டை போட்டனர் தெலங்கானா ஆதரவுத் தரப்பினர்.

இதையடுத்து காங்கிரஸ் மேலிடம் யாத்திரையைக் கைவிடுமாறு ஜகனைக் கேட்டுக் கொண்டது. யாத்திரையைக் கைவிட முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்த ஜகன் ஒவ்வொரு ஊராகச் சென்று மக்களைச் சந்திக்கத் தொடங்கினார். தற்போது கடப்பா தொகுதியின் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஜகன் “சாக்‌ஷி” நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி அலைவரிசையின் நிறுவனரும் ஆவார்.

ஒவ்வொரு ஊரிலும் ஜகனைச் சந்திக்கக் கூடுகிற கூட்டம் தொலைக் காட்சியிலும் செய்தித் தாளிலும் நாள்தோறும் இடம்பெறுகிற அம்சங்களாகிவிட்டது. இதற்கிடையே சாக்‌ஷி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சோனியா காந்தி குறித்த நிகழ்ச்சி ஒன்றும் பிரச்சனைக்குத் தோற்றுவாயாக அமைந்தது. சோனியா காந்தி குறித்து ஆந்திர அரசியல் தலைவர்களிடம் கருத்து கேட்பது போன்ற அந்த நிகழ்ச்சியில் சில எதிர் கட்சித் தலைவர்கள் சோனியா மீது கடுமையான விமர்சனங்களை வைத்திருந்தனர். முதல் முறை இந்நிகழ்ச்சி ஒளிபரப்பான போதே பெரிய சர்ச்சை வெடித்தது. நிகழ்ச்சியில் தவறாக எதுவும் இல்லை என்று மறுப்பு தெரிவித்த ஜகன் அதே நிகழ்ச்சியை பிரைம் டைமில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பச் செய்தார்.

காங்கிரஸ் இயக்கம் இதனால் எரிச்சலடைந்த போதிலும் ஜகன் மீது இதுவரை நேரடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த பிரச்சினையையும் ரோசையா சரிவரக் கையாளவில்லை என்று மாநில காங்கிரஸ் பிரமுகர்களே கடுமையான கண்டனங்களைத் தெரிவித்ததை அடுத்து முதலமைச்சர் ரோசையா டெல்லி சென்று தன் தரப்பை மேலிடத்திற்குத் தெரிவித்தார். ஆந்திர மாநிலத்தின் சமீபத்திய மழை வெள்ள பாதிப்புகள் குறித்தும் அவர் மேலிடத்திற்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. டெல்லியிலிருந்து ஊர் திரும்பிய ரோசையா யாரும் எதிர்பாராத நேரத்தில் நேற்று மதியம் தனது ராஜினாமா அறிவிப்பைப் பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

நேற்று மதியம் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உடல்நிலை மற்றும் வயது காரணமாகப் பதவி விலகுவதாகக் கூறிய ரோசையா, மிக உருக்கமாகப் அவர்களிடமிருந்து விடை பெற்றார். அங்கிருந்து ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மனுக்குப் பூச்செண்டு கொடுத்த ரோசையா தனது ராஜினாமா கடித்தையும் சமர்ப்பித்தார்.

முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி உள்ளிட்ட சிலரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாக செய்திகள் கசிந்தன. நேற்று மாலை கூடி விவாதித்த காங்கிரஸ் சட்டமன்றக் குழு முதலமைச்சரைத் தேர்வு செய்யும் அதிகாரத்தை சோனியா காந்திக்கு வழங்கித் தீர்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து தற்போதைய ஆந்திர சட்டமன்றத்தின் சபாநாயகராக உள்ள கிரண் குமார் ரெட்டி முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று பகல் 12:14 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொள்ள இருக்கிறார் கிரண் குமார்.

ஓதார்ப்பு யாத்திரையால் ஜகன் மீது ரெட்டி சமூகத்தினரிடையே பெருகி வரும் அபிமானத்தைத் தடுத்து நிறுத்தவே மீண்டும் காங்கிரஸ் தலைமை ரெட்டி சமூகத்தைச் சேர்ந்த கிரண் குமாரை முதல்வராக்கியிருப்பது கண்கூடு.

இதனிடையே ”இது முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்சியின் உள் விவகாரம். இதில் கருத்து தெரிவிக்க எதுவும் இல்லை. ஆந்திர மாநிலத்தின் எந்த பிராந்தியத்தைச் சேர்ந்தவர் முதல்வராக வந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை. ஆனால் தெலங்கானா தனி மாநிலத்திற்கான முன்னேற்பாடுகள் தடையின்றி நடைபெற்றாக வேண்டும்” என்று கருத்து தெரிவித்துள்ளார் தெலங்கான ராஷ்ட்ர சமிதிக் கட்சித் தலைவர் கே. சந்திரசேகர ராவ்.

சித்தூர் மாவட்டம் பிலெரு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான இவர் ஆந்திர மாநில வரலாற்றிலேயே மிக இளம் வயதில் முதல்வரானவர் என்ற பெருமைக்கு உரியவராகிறார் (1960ம் ஆண்டு பிறந்தவர்). 1989ம் ஆண்டு முதல் அதே தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்றவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. சட்டப் படிப்பு முடித்த இவர், கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமும் ஈடுபாடும் உள்ள விளையாட்டு வீரரும் ஆவார்.

மொத்தத்தில் ஜாதி அரசியலின் சமீபத்திய உதாரணமாக அரங்கேறி முடிந்திருக்கிறது ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் மாற்றம்.

Monday 22 November, 2010

ஏமீ... ஏமேமீ... [ரசித்த ட்விட்டுகள்]

டிபிசிடி: நான் தங்க[பாலு திமுகவின் காங்கிரசுப் பிரிவுத் தலைவர் என்றல்லவா நினைத்திருந்தேன்..மாத்திட்டாங்களா..?


ராஜன் ஆல் இன் ஆல்: மனைவியின் தோழிகள் அண்ணா என்றழைக்கையில், உலக வாழ்வின்மீது சலிப்புத் தட்டுவதை தவிர்க்கவே முடியவில்லை! # ஸோ ஸேட்!

குசும்பு ஒன்லி: ஓபாமா இந்தியா வந்த விதம் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி உங்கள் சன் டீவியில்.

லதானந்த்: குங்குமத்தில என்னுடைய தொடர் கட்டுரை வந்துகிட்டிருக்குது. படிச்சு அபிப்ராயம் சொன்னா தெக்க தெரியற தென்னந்தோப்பு உங்களுக்கே!

சங்’கவி’: உன் வீட்டு ரோஜா மொட்டு மலரவே இல்லையென குழம்பாதே. மலர்தான் உன்னை முத்தமிட எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!

உமா ருத்ரன்: வாட்டர் கேட்? ஆமாம் மழைத்தண்ணீர் வீட்டு கேட் தாண்டி வந்து விட்டது. அதுக்கென்ன இப்ப?

கேபிள் சங்கர்: வாழ்க்கைங்கிறது... மெகா சீரியல் போல எதுக்கு டி.ஆர்.பி அதிகமா இருக்கோ அத்தோட ஓடுறதுதான் நல்லது.

வால்பையன்: டோண்டு நண்”பேன்” தான், இப்ப தான் அரிக்க ஆரம்பிக்குது! # என் உச்சி மண்டைல சுர்ருங்குது

செல்வேந்திரன்: எத்தனை பேரால் காதலிக்கப்பட்டிருக்கிறோமென்பது திருமண அழைப்பிதழை விநியோகிக்கையில்தான் தெரிய வருகிறது!


Monday 15 November, 2010

மிருக புத்திரன் கவிதைகள் - பகுதி 1 [15/11/210]

________________ (டேஷ்) புத்திரன்

அக்னி புத்திரன்
பாரதி புத்திரன்
காந்தி புத்திரன்
தேவி புத்திரன்
கேரள புத்திரன்
ஆந்திர புத்திரன்
கர்நாடக புத்திரன்
வேளாள புத்திரன்
வன்னிய புத்திரன்
முக்குல புத்திரன்
வட தமிழக புத்திரன்
மதுரை மண்ணின் புத்திரன்
கொங்கு மண்டல புத்திரன்
இவற்றுள் ஒன்றிர்க்குப்
புத்திரனாய் இல்லாவிடில் எழுத்துலகில்
பிழைத்தலரிதென்ற காரணம் பற்றி
கோபால்சாமி புத்திரன் இன்று முதல்
மிருக புத்திரன் ஆகிறேன்,
சகலரும் அறிக.
என் சொல் கேளீர், நீங்களும்
கோடிட்ட இடம் நிரப்பிப்
பெயருக்கு முன் சேர்ப்பீர்!



அண்ணாமலைன்னு எனக்கொரு நண்பேன். அவனுக்கு செல்போன்ல பேசுறதுன்னாலே அலர்ஜி. போன்ல கூப்பிடுற எல்லார் கிட்டயும் “எதா இருந்தாலும் லெட்டர் எழுதுங்க”ன்னு சொல்றதுக்கு மட்டும் ஒரு 1100 வச்சிருக்கான். சமீபத்துல கார் எடுக்கறதுக்கு எடைஞ்சலா இருந்த அண்ணாமலையோட பைக்க நகத்தச் சொல்றதுக்குப் பக்கத்து வீட்டுக்காரர் காலிங் பெல்லை அடிச்சிருக்கார். “ஏன்யா லெட்டர் எழுதிக் கேட்டுட்டு வரலை”ன்னு அந்தாள்கிட்டயும் சண்டை.

அடுத்த வீட்டுக்கே இந்த நெலைமைன்னா அடுத்த ஸ்டேட்ல இருக்கற என் நிலைமைய யோசிச்சுப் பாருங்க? அஞ்சு பதிவு எழுதியாச்சுன்னா ஆறாவது பதிவு எழுதுறதுக்கு முன்னாடி அந்த அஞ்சு பதிவையும் அதுக்கு வந்த கமெண்ட்சையும் கடிதமா எழுதி அவனுக்கு அனுப்பியாகனும்.

ரீஜண்ட்டா அந்தக் கணக்கு மிஸ்ஸாகி ஆறேழு பதிவு எழுதிட்டேன். வரலாற்றிலேயே மொதல் முறைய அம்பத்தி ரெண்டு செகெண்ட் போன்ல பேசினான். அதுவும் அவுட்-கோயிங். அம்பத்தி ரெண்டு செகெண்ட்ல நான் ஒரு ஹலோ கூட சொல்லலை. ஆனா அதுக்குள்ள லெட்டர் எழுதாததுக்கு கடுமையான வசவு, அடுத்த பதிவுல கவிதை எழுதனும், கவிதை என்ன மாதிரி எழுதனும், என்னைக்குள்ள எழுதனும், எழுதலைன்னா என்ன ஆகும்ங்கறதையெல்லாம் சொல்லிட்டு, நான் சரின்னு சொல்லக் கூட நேரம் குடுக்காம கட் பண்ணிட்டான்.

அவனோட அழைப்பு அம்பத்தி மூணாவது செகெண்டத் தொட்டிருந்தா கூட நீங்க என்னை உயிரோட பாத்திருக்க முடியாது. அவ்வளவு கடுமையா இருந்துச்சு. விளைவுகளுக்குப் பயந்து அவன் சொன்ன புதன் கிழமைக்கு ரெண்டு நாள் இருக்கையிலேயே பதிவு எழுதிட்டேன். அதுவும் அவன் சொன்ன மாதிரியே எழுதிட்டேன்.

மிருக புத்திரன் கவிதைகள இனிமே நீங்க மாசம் ஒரு தடவையாச்சும் படிக்கலாம். அதுக்கு நான் இல்லை, அண்ணாமலை கேரண்ட்டி.

Saturday 13 November, 2010

உஷாராணி சாம்பவி இன்னும் சில மர்மங்கள்

ஆந்திர மாநிலத்தின் தற்போதைய பரபரப்புச் செய்தி குழந்தை சாம்பவியைப் பற்றியதுதான் என்று சொன்னால் அது மிகையில்லை. எட்டு வயது சாம்பவி தன்னை முற்பிறவியில் திபேத்திய பௌத்த மதகுரு தலாய்லாமாவின் சிஷ்யையாய் இருந்தவர் என்று சொல்லிக் கொள்கிறார். இளம் சாமியாரிணியாக வலம் வந்த சாம்பவியைச் சுற்றிப் பல்வேறு சர்ச்சைகள்.

குழந்தை சாம்பவியின் காப்பாளராக சொல்லப்பட்டு வந்தவர்தான் உஷாராணி. இவர் பால சந்யாசினி சாம்பவி கலந்து கொள்ளுகிற நிகழ்வுகளுக்குப் பல லட்சம் ரூபாய் தட்சணையாக வசூலிக்கிறார் என்ற குற்றச்சாட்டு பலராலும் எழுப்பப் படுகிறது.

சாம்பவியின் குழந்தைப் பருவத்தை காப்பாளர் உஷாராணி தனது பணத்தாசைக்காக வீணாக்குகிறார் என்ற மனித உரிமை ஆர்வலர்களின் வாதத்தை ஏற்று ஆந்திர மாநில மனித உரிமை ஆணையம் குழந்தை சாம்பவியைப் பள்ளிக்கு அனுப்ப உத்தரவிட்டது.

இதையடுத்து சாம்பவியும் உஷாராணியும் தலைமறைவாயினர். தற்போது கார்த்திகை மாத பூசைகள் செய்வதற்காக மீண்டும் ஆந்திர தலைநகர் ஐதராபாத்திற்கு குழந்தை சாம்பவியுடன் வந்துள்ளார் உஷாராணி. சாம்பவி இமாசலப் பிரதேசம் தர்மஸ்தலாவில் உள்ள பௌத்த சமயப் பள்ளி ஒன்றில் படித்து வருவதாகவும் ஆதாரப்பூர்வமற்ற செய்தி ஒன்று உலாவுகிறது.

தலைமறைவுக்குப் பிறது மீண்டும் ஐதராபாத் வந்துள்ள சாம்பவியை அங்குள்ள அஷ்டலட்சுமி ஆலயத்தில் செய்தியாளர்கள் சந்தித்த போது “பூமியில் ஏற்படுகிற பிரளயங்களுக்கெல்லாம் மனிதர்கள் ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள பகையும் இரக்கமின்மையுமே காரணம்” என்று கூறினார். சாம்பவியிடம் அவரது பள்ளிப்படிப்பு குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டபோது அங்கிருந்த அர்ச்சகர் மைக்கில் மந்திரங்களைச் சொல்லியபடி யாகம் நடத்தத் தொடங்கிவிட்டார். நிருபர்களின் கேள்வி சாம்பவியின் காதில் விழுந்துவிடாத படிக்கு அங்கே சம்பவங்கள் அரங்கேறின. மைக்குகள் மற்றும் கேமராக்களைப் பறித்து சாம்பவியின் ஆதராவாளர்கள் செய்தியாளர்களைக் குழந்தையை நெருங்கவிடாத படிக்குச் சூழ்ந்து கொண்டனர். யார் இந்த சாம்பவி? யார் இந்த உஷாராணி?

ஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டம் பாப்பட்லாவைச் சேர்ந்தவர் உஷாராணி. பதினான்கு வயதில் உஷாராணியை திவாகர் என்பவருக்குத் திருமணம் செய்து வைத்தனர் அவரது பெற்றோர். பின்னர் உஷாராணி ஒரு ஆண் குழந்தைக்குத் தாயானார். அவருக்குப் பதினெட்டு வயது இருக்கும் போது கணவர் திவாகர் இறந்துவிட, குழந்தையை வளர்க்கும் பொறுப்பை உஷாராணியின் பெற்றோர் ஏற்றுக் கொண்டனர். தாத்தா மற்றும் பாட்டியால் வளர்க்கப்பட்ட உஷாராணியின் மகன் லலிதேந்திரநாத்திற்குத் தற்போது வயது முப்பது.

திருமணத்திற்கு முன்பு எட்டாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த உஷாராணி தனது இருபத்தி மூண்றாவது வயதில் மைசூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப் படிப்பு முடித்தார். தனது இருபத்தைந்தாவது வயதில் தெலுங்கிலும் ஆங்கிலத்திலுமாக யோகா மற்றும் ஆன்மீகம் தொடர்பிலான நான்கு புத்தகங்களை எழுதி வெளியிட்டார்.

கடந்த 1998ம் ஆண்டு யோகா பயிற்றுநர் சௌமியாச்சார்யாவின் அறிமுகம் கிடைக்கப் பெற்ற உஷாராணி 1999ம் ஆண்டு அவரையே திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கடந்த சில ஆண்டுகளாக குழந்தை சாம்பவியின் காப்பாளராக வளைய வந்தார் உஷாராணி.

தாயார் உஷாராணியுடன் சாம்பவி
[படம்: சாக்‌ஷி தெலுங்கு நாளிதழ்]
சாம்பவியைச் சட்ட விரோதமாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்த புகாரை அடுத்து சாம்பவி தன்னுடைய மகள் என்றும் தனக்கும் சௌமியாச்சார்யாவிற்கும் பிறந்த குழந்தை தான் சாம்பவி என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதற்கு ஆதாரமாக திருப்பதி நகராட்சியால் வழங்கப்பட்ட சாம்பவியின் பிறப்புச் சான்றிதழையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

சாம்பவியை அபூர்வ சக்திகள் பொருந்திய குழந்தை என்று சொல்லி வருகிறார் உஷாராணி. ஆனால் சாம்பவி கூறுகிற ஆன்மிகக் கருத்துக்கள் ”பொத்துலூரி வீரப்ரம்மம் ஸ்வாமி” என்பவர் எழுதிய “காலக்ஞானம்” என்ற நூலில் உள்ளவையே என்று கூறுகின்றனர் விபரமறிந்தோர். எட்டு வயதுக் குழந்தைக்கு இது போன்ற கருத்துக்களை மனப்பாடம் செய்ய வைப்பது ஒன்றும் கடினமான வேலையில்லை என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

2012ம் ஆண்டு திபேத் சீனாவின் இரும்புப் பிடியிலிருந்து விடுதலை அடையும் என்று ஆருடம் சொல்லி வருகிற சாம்பவியைக் குறித்து தலாய்லாமாவும் இது வரை மௌனம் சாதித்தே வருகிறார். டி.ஆர்.பி பசியோடு அலையும் ஊடகங்களுக்கு சாம்பவி நன்றாகவே தீனி போடுகிறாள். பூமியில் ஏற்படுகிற பிரளயங்கள், மக்களால் அறியப்பட்ட பிரபலங்களின் மரணம், போன்றவை குறித்து ஆங்கிலம் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் கேமெரா வெளிச்சத்துக்குப் பயப்படாமல் பேசுகிறாள் சாம்பவி.

இதே போல் தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட பரணீதரன் என்கிற ஸ்ரீஹரி பரணீதர ஸ்வாமிகள் பற்றிய செய்திகள் நாளடைவில் மறைந்து போய்த் தற்போது சேலம் பள்ளி ஒன்றில் படித்து வருவதாகக் கேள்வி. வலுவான நெட்வொர்க்கில் சிக்கியிருக்கும் சாம்பவி இதிலிருந்து வெளிவருவது கடினம் என்றே நம்ப வேண்டியிருக்கிறது. மொத்தத்தில் சாம்பவி சிலருக்குக் கற்பக மரமாக விளங்குகிறாள் என்பதை விட வேறு சரியான வார்த்தைகளால் இதைப் பற்றிச் சொல்லிவிட முடியது!

Monday 8 November, 2010

அப்பாடா ஒரு பதிவு தேத்திட்டேன்...

சென்னையில் என்னுடன் பணிபுரிந்து தற்சமயம் ஓஸ்ட்ரேலியாவில் பணிபுரிகிற அண்ணன் ஒருவர் எனது பதிவுகளை மிகவும் ரசித்துப் படிக்கிறவர். குடும்பக் கோட்டைக் கனவு சிங்கம் பதிவைப் படித்துவிட்டு தொலைபேசியில் அழைத்துப் பாராட்டினார்.

கடைசியா எழுதுன ரத்த சரித்திரம் பதிவைப் பாத்துட்டு வயலன்ஸ் கம்மி பண்ண சொல்லி அறிவுரை சொல்லிருந்தார். ஏன் ரொம்ப நாளா எழுதலைன்னும் கேட்டார்? அடுத்த பதிவு இன்னும் அஞ்சு நாளைக்குள்ள வரனும்னு டெட்லைன் வேற குடுத்துட்டார். டெட்லைண் குடுத்தா அப்படியே எழுதிக் கிழிச்சுட்டு தானே நாம வேற வேலை பாப்போம். குடுத்து இன்னையோட பதிமூணு நாளாச்சு. மதிச்சு போனெல்லாம் பண்ணிருக்காரே அதுக்காச்சும் எழுதனுமேன்னு யோசிச்சப்பவே ரொம்ப மலைப்பா இருந்துச்சு.

எத எழுதலாம், என்னத்த எழுதலாம்னு போய் டிவி யப் போட்டா மன்மோகன் சிங் மரப மீறி ஒபாமாவ விமான நிலையத்துக்கே போய் வரவேற்றார்னு செய்தியில காமிக்கிறாங்க. காட்சிய திடீர்னு பாத்தப்போ பிரதமர் பட்டுப் பொடவை சைசுல ஒரு கோமணத்த இடுப்புல கட்டிக்கிட்டு இடுப்புள்ள உள்ளது போக மீதிய தரையில விரிச்சு வச்சு அதுல ஒபாமா ந்டந்து வற்றா மாதிரியே இருந்துச்சு.

ஏதுடா இறையாண்மைக்கு வந்த சோதனைன்னு தேடி எடுத்துக் கண்ணாடிய மாட்டுன அப்புறந்தான் தெரிஞ்சுது அது செவப்புக் கம்பளமாமாம். இதில்லாம திருமதி சிங் ஒபாமாவுக்கு முத்தம் வேற குடுத்தாங்க. ஒபாமா தம்பதியர் போட்ட மினி குத்து டான்சையும் காட்டுனாங்க.

மழை நேரத்துல ஈரக் கையால சுச்சு போர்ட தொடக் கூடாதுன்னு டிவில சொன்னாங்க. சரி சமூக அக்கறையோட இதை சென்னையில இருக்கற நண்பர்களுக்கெல்லாம் சொல்லுவோம்னு ஒவ்வொருத்தருக்கா போன் பண்ணுனப்போ நண்பர் மதிமாறன் ஞாபகம் வந்துச்சு. அவரோட பேசி ரொம்ப நாளாச்சேன்னு அடுத்து அவருக்கு அழுத்துனேன். கொஞ்ச நேர நல விசாரிப்புகளுக்குப் பிறகு பொதுவான விஷயங்களப் பேசும் போது சொன்னாரு “சென்னை நம்ம சென்னை” ங்கற பத்திரிகைல உங்களோட கட்டுரை அச்சாகிருந்துச்சு. ஒருத்தரச் சந்திக்கப் போனப்போ வரவேற்பரையில அந்த புத்தகம் இருந்துச்சு. அப்பத்தான் படிச்சேன்னு சொன்னாரு.

சரி தேடித்தான் பாப்போம்னு முயற்சி பண்ணுனா இந்த லிங்க் கிடைச்சுது. செப்டம்பர் மாத வெளியீட்டுல கட்டுரை சுருக்கப்பட்ட வடிவத்துல வந்திருந்துச்சு. அந்தக் கட்டுரையோட தொடுப்பு இது. கட்டுரையோட முழு வடிவம் இங்கே.



ஒரு வழியா பிச்சுப் பீராஞ்சு ஒரு பதிவு தேத்திட்டேன். டெட்லைன மீட் பண்ணலைன்னாலும் டாஸ்க் கம்ப்ளீட்டாகிருச்சு. ஓஸ்ட்ரேலியா அண்ணே, கோவிக்காதிங்க. போய்ட்டு வற்றேன்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan