இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Monday 11 April, 2011

என்னை இந்தி படிக்க உடாம தடுத்துட்டாங்க... அதே பழைய பல்லவி...

10,543வது ஆளாக இந்தப் பதிவின் தலைப்பைச் சொல்லிப் புலம்புகிற ஒருவரின் பதிவைச் சமீபத்தில் படிக்க நேர்ந்தது. தேர்தல் நேரத்தில் அரசியல் பதிவு எதையாவது எழுதி வைக்க வேண்டுமே என்ற அரிப்பு நன்றாகத் தெரிகிறது. நல்ல சுவராகப் பார்த்து முதுகைத் தேய்துக் கொண்டால் நல்லது.

எனக்கு அப்பவே இந்தி கத்துக் குடுத்திருந்தா நான் இப்படி வெளி மாநிலத்தில் அல்லல் பட வேண்டியதிருக்காதே என்று புலம்புறதும், எங்கம்மா என்னைப் பெத்தப்பவே ஸ்கேட்டிங் ஷூவோட பெத்திருந்தா இன்னிய தேதிக்கு நான் ஸ்கேட்டிங்ல பெரிய ஆளாகிருப்பேன்னு சொல்றதுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்னும் இல்லை. அவ்வளவு அபத்தமா இருக்கு அந்தப் பதிவு.

இப்படிப் புலம்புகிறவர்கள் இன்னொன்றும் சொல்லுகிறார்கள், “இந்தி தெரிஞ்சிருந்தா தமிழ்நாடு தவிர்த்து எங்கே போனாலும் சமாளிக்கலாம்” என்று. இவுங்களுக்காக ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன். சென்னை செங்குன்றத்திலிருந்து 40 கி.மி.க்குப் பக்கமாகத் தொடங்குகிறது ஆந்திர எல்லை. அங்கே பெரும்பாலோருக்கு இந்தி தெரியாது. அப்படியே நூல் புடிச்சு கர்நூல், கடப்பா, காக்கிநாடா, பெஜவாடா, விசாகப்பட்டிணம் என்று மேல் நோக்கி நகர்ந்தால் அங்கும் இந்தி தெரியாதவர்கள் தான் அதிகம். இத்தனைக்கும் ஆந்திர அரசின் கல்வித் துறை, தெலுங்கு, ஆங்கிலம், உருது, இந்தி என்று நான்கு மொழிகளில் (மீடியம்) கல்வி கற்பிக்கிறது.

நைசாம் (நிஜாம்) ஆளுகையில் இருந்த 10 தெலங்கானா மாவட்டங்களில் ஐதராபாத், செகந்திராபாத் சுற்றுப் புறங்களில் மட்டும் பெரும்பாலானோர் சரளமாக இந்தி பேசுகிறார்கள். அதே சமயம் தெலுங்கிலும் பேசுகிறார்கள். ஆனால் அவர்களுடைய வட்டார வழக்குத் தெலுங்கில் சென்னைத் தமிழ் போலவே வேற்று மொழிச் சொற்கள் (உருது, இந்தி) அதிகம் கலந்து காணப்படும். ஒரு மாநிலத்தில் ஒரு பகுதியில் பேசுகிறார்கள் என்பதால் அந்த மாநிலம் முழுவதும் இந்தி தெரிந்தவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய அபத்தம். இதை ஐதராபாத்தில் இருந்து கொண்டு சொல்கிறேன்.

இதற்கப்புறம் இன்னொன்றும் சொல்கிறார்கள், “எப்படி இருந்தாலும் இந்தியாவுல இந்தி பேசுறவுங்க தானே மெஜாரிட்டி” என்று. மெஜாரிட்டி மைனாரிட்டி கணக்கு சொல்றவர்கள் ஒரு விஷயத்தை வசதியாக மறந்து விடுகிறார்கள். உலகத்திலேயே மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கிறவர்கள் சீனர்கள். அதாவது சீன மொழி தான் அதிகம் பேரால் பேசப்படும் மொழி. அப்படி இருக்கும் போது நம்ம ஊர் பள்ளிக் கூடங்களில் சீன மொழியைக் கற்றுக் கொடுக்க வேண்டுமா அல்லது இந்தி மொழியைக் கற்றுக் கொடுக்க வேண்டுமா? மெஜாரிட்டி மைனாரிட்டி பேசுகிற யாரும் இந்தப் புள்ளி விபரம் பற்றி வாயே திறக்க மாட்டார்கள்.

இப்படி பல்வேறு வாதங்களால் மூக்குடை பட்ட பின்னர், “என்ன இருந்தாலும் நம்ம நாட்டோட தேசிய மொழியை இப்படி அவமானப்படுத்தலாமா” என்று முணகுவார்கள். இந்த “தேசிய மொழி” அஸ்திரத்தை பிரயோகித்ததும் ஏதோ கர்னனைச் சாய்த்துவிட்ட அர்ஜுனன் ரேஞ்சுக்கு ஒரு லுக்கு விடுவார்கள். “தேசிய மொழி” என்கிற சாணிப் புளுகை இன்னும் எத்தனை நாட்கள் அவிழ்த்து விடுவார்களோ தெரியவில்லை.

அவர்களெல்லாம் நீதிபதி எஸ்.ஜே. முகோபாத்யாயா மற்றும் நீதிபதி ஏ.எஸ். தவே ஆகியோர் வழங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பைப் படித்துப் பார்க்க வேண்டுமாய்ப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்திய அரசியல் அமைப்பு இந்தியை ஒரு அலுவல் மொழியாகப் பரிந்துரைக்கிறதே தவிர அதை ஒரு இடத்திலும் தேசிய மொழி என்று வலியுறுத்தவில்லை. அரசியலமைப்பானது அலுவல் மொழி என்கிற ஸ்தானத்தையும் இந்தி மொழிக்கு மட்டும் கொடுத்துவிட வில்லை. ஆங்கிலமும், அந்தந்த வட்டாரங்களில் பேசப்படும் மொழிகளும் கூட இந்தியாவின் அலுவல் மொழிகள் தான் என்று உறுதி செய்கிறது. அந்தத் தீர்ப்பின் விபரங்களைக் கீழுள்ள இணைப்பில் படிக்கலாம்: http://www.thehindu.com/news/national/article94695.ece

இவ்வளவும் எழுதியதால் நான் இந்தி படிக்காதவன், இந்தியை வெறுப்பவன் என்றெல்லாம் நினைத்து விட வேண்டாம். மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 3 ஆண்டுகள் இந்தி படித்தவன் தான், 80 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவன் தான். ஆனால், அந்த மூன்று ஆண்டுகளும் இந்தி வகுப்புகள் எனக்குப் பெரிய துன்புறுத்தலாகத் தான் இருந்தன. அ, ஆ, இ, ஈ என்று தமிழ் ஆசிரியையிடம் சொல்லும் போது அம், அஹ என்று முடித்து பல முறை அடி வாங்கியிருக்கிறேன். ஆனால் பள்ளிக்கு வெளியே ஒரு இடத்திலும் பேசப் பயண்படாத அந்த மொழி இருபது ஆண்டுகளுக்கு எனக்கு எதற்கும் உதவவில்லை.

2007 ஏப்ரல் முதல் ஆந்திரத் தலைநகர் ஐதராபாதில் பணிபுரிந்து வருகிறேன். இந்த ஊருக்கு வருவதற்கு 60 நாட்கள் முன்பிருந்து புத்தகங்கள் வழியாக தெலுங்குச் சொற்களையும் அவற்றுக்கான பொருளையும் படித்துத் தெரிந்து கொண்டு தான் புறப்பட்டேன். இங்கே வந்த பிறகுதான் ஆந்திர மாநிலத்தின் பூகோளமும் பண்பாடும் புரிந்தது. ஐதராபாத் நகரில் இந்தி பேசுகிறவர்கள் தான் அதிகம் இருக்கின்றனர். ஆனால் இருபது ஆண்டுகள் பேசிப் பழகாமல் இருந்ததால் இந்தி மொழியில் பேசவும் பதிலளிக்கவும் திணறினேன். இந்த ஊரில் நான்காண்டுகளுக்கு மேல் வசித்தும் இந்தி இன்னும் சரளமாக வசப்படவில்லை. ஆனால் வெறும் எட்டே மாதத்தில் விரும்பிக் கற்ற தெலுங்கு இந்தியை விட அதிகம் கை கொடுக்கிறது.

இந்தி தெரியாதது ஒன்றும் உடல் ஊனம் கிடையாது, வருந்திப் புலம்புவதற்கு. அதே சமயம் இந்தி பேசுகிறவர்கள் பெரும்பாலாணோர் வசிக்கிற மாநிலங்களில் வேலைக்குப் போகும் போது உரிய தயாரிப்புகள் இல்லாமல் போனால் அது நம்முடைய தவறு. அதே போன்று தயாரிப்பில்லாமல் ஒரு வட இந்தியன் இங்கே வந்து “இந்தியில் பேசினால் எவனும் பதில் சொல்ல மாட்டேங்குறான்” என்று புலம்புவது அதைவிடத் தவறு. இதற்காக அரை நூற்றாண்டுக்கு முன்பு நடந்த விஷயங்களைக் குற்றம் சாட்டுவது கடைந்தெடுத்த முட்டாள் தனம், அயோக்கியத் தனம்.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்: இந்தியில் பொளந்து கட்டுகிற லாலுபிரசாத் யாதவுக்குத் தாய்மொழி இந்தி கிடையாது! பீகாரின் மக்கள் தொகையில் அதிக எண்ணிக்கையினர் பேசுவது போஜ்பூரி மொழி.

22 மறுமொழிகள்:

Anonymous said...

வழக்கம் போல சூப்பர்

- சேவியர்

Jawahar said...

நம் தாய்மொழி தவிர்த்து வேறு சில மொழிகள் தெரிந்திருப்பது நிச்சயம் கைகொடுக்கும். அதிலும் நாட்டில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களுக்குத் தெரிந்த மொழி என்றால் பலன்கள் பன்மடங்காகும். ஒரு மொழியை நிர்பந்தமாகத் திணிப்பது தவறுதான். அதே அளவு தவறு அதன் பால் காழ்ப்புணர்ச்சியைத் தோற்றுவிப்பதும்தான்!

http://kgjawarlal.wordpress.com

Anonymous said...

அருமை, அருமை. சம்மட்டியில் அடித்தது பொல அழகாக தெளிவாக உண்மைகளை பிட்டு பிட்டு கூறியிருக்கின்றீர்கள்.மரமண்டைகளுக்கு புரிந்தால் சரி.

Anonymous said...

அரை நூற்றாண்டுக்கு முன் நடந்ததை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது முட்டாள் தனம் என்று சொல்லும் அல்லக்கைகள், பல நூற்றாண்டுகளுக்கு முன் பார்ப்பனர்கள் அடிமைப் படுத்தினார்கள் என்று சொல்லி இட ஒதுக்கீடுக்கு ஜல்லியடிப்பது எந்த விதத்தில் நியாயம்?

Thirumalai Kandasami said...

http://enathupayanangal.blogspot.com/2011/01/blog-post.html
ஹிந்தி - அறிந்தும் அறியாமலும்.

Anonymous said...

//
அதே அளவு தவறு அதன் பால் காழ்ப்புணர்ச்சியைத் தோற்றுவிப்பதும்தான்!
//

விளக்கினால் நலம்.

Anonymous said...

// பல நூற்றாண்டுகளுக்கு முன் பார்ப்பனர்கள் அடிமைப் படுத்தினார்கள் என்று சொல்லி//

பல நூற்றாண்டுகளாக !

பார்ப்புகளின் தந்திரம் சப்ளையைக் குறைத்து டிமாண்டை அதிகரித்து, சப்ளையை தங்களின் ஏகபோகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததே. தேவைப்படுவோர் தங்களுக்கு வேண்டியவர் எனும்போது தம் கோவணத்தை நெகிழ்த்தி வாய்ப்பு சுண்டல் வழங்குவதே. இடப்பங்கீடு செய்தது எல்லாம் அந்த மோனோபொலிக்கு ஆப்படித்ததே.

தனியார் கல்விக்கூடங்கள் திறந்ததினால் (எப்படிப்பட்ட தரத்துடனும்) சப்ளை அதிகரித்து இன்றை ஒவ்வொரு மாநிலத்திலும் ஆயிரக்கணக்கில் காலியிடங்கள் காத்து வாங்குகின்றன.

Unknown said...

//வழக்கம் போல சூப்பர்

- சேவியர்//

மிக்க நண்றி அண்ணே.

Unknown said...

//நம் தாய்மொழி தவிர்த்து வேறு சில மொழிகள் தெரிந்திருப்பது நிச்சயம் கைகொடுக்கும். அதிலும் நாட்டில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களுக்குத் தெரிந்த மொழி என்றால் பலன்கள் பன்மடங்காகும். ஒரு மொழியை நிர்பந்தமாகத் திணிப்பது தவறுதான். அதே அளவு தவறு அதன் பால் காழ்ப்புணர்ச்சியைத் தோற்றுவிப்பதும்தான்!//

ஜவஹர் சார், மறுபடியும் அதே மெஜாரிட்டி மைனாரிட்டி கணக்கையே புடிச்சுக்குறீங்களே! அப்படிப் பாத்தா தாவர உணவுக்காரங்களை விட இறைச்சி உணவுக்காரங்க தான் எண்ணிக்கையில் அதிகம். வற்றீங்களா, ரெண்டு பேரும் போய் மாட்டிறைச்சியும் பன்றி இறைச்சியும் சாப்பிடலாம். ரெண்டிலயும் நெறைய புரதம் இருக்குன்னு வேற சொல்லுறாங்க! அதிக எண்ணிக்கையிலான மக்கள் பேசுற மொழியைப் பேசுனா பலன் அதிகம். அதே மாதிரி அதிக எண்ணிக்கையிலான மக்கள் பின்பற்றுகிற மதத்துக்கு மாறுனாலும் பலன்கள் அதிகம் தானே! எப்போ கிறிஸ்துவ மதத்துக்கு மாறப் போறீங்க சொல்லுங்க!

Unknown said...

//அருமை, அருமை. சம்மட்டியில் அடித்தது பொல அழகாக தெளிவாக உண்மைகளை பிட்டு பிட்டு கூறியிருக்கின்றீர்கள்.மரமண்டைகளுக்கு புரிந்தால் சரி.//

பாராட்டுக்கு நன்றி. வெறும் பாராட்டை விட எனக்கு ஆதரவாவோ, விமர்சனமாவோ எதாவது ஒரு கருத்தைச் சொன்னால் நல்லது.

Unknown said...

//அரை நூற்றாண்டுக்கு முன் நடந்ததை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது முட்டாள் தனம் என்று சொல்லும் அல்லக்கைகள், பல நூற்றாண்டுகளுக்கு முன் பார்ப்பனர்கள் அடிமைப் படுத்தினார்கள் என்று சொல்லி இட ஒதுக்கீடுக்கு ஜல்லியடிப்பது எந்த விதத்தில் நியாயம்?//

அரை நூற்றாண்டுக்கு முன்பு இந்தி படிக்காதே என்று சொன்ன யாரும் இப்போது உன் கையைப் பிடித்துத் தடுக்க மாட்டார்கள். ஆனால் பார்ப்பான் பல நூற்றாண்டுகளுக்கு முன் எப்படி இருந்தானோ அப்படியே தான் இப்போதும் இருக்கிறான். அன்றைக்கு நந்தனைத் தூக்கிப் போட்டுக் கொளுத்தியவர்கள் தான் இப்போது ஆறுமுகசாமியைத் தூக்கிப் போட்டு மிதிக்கிறார்கள். பார்ப்பான் மாறவே இல்லை.

Unknown said...

//விளக்கினால் நலம்.//

இந்தப் பதிவில் எங்கே நான் இந்தி மொழியின் பால் காழ்ப்புணர்ச்சி தோற்றுவித்தேன் என்று தெரியவில்லை. உங்களைப் போலவே அவர் வந்து விளக்குவார் என்று நானும் காத்திருக்கிறேன்.

Unknown said...

//http://enathupayanangal.blogspot.com/2011/01/blog-post.html
ஹிந்தி - அறிந்தும் அறியாமலும்//

உங்களுடைய அனைத்துப் பாயிண்ட்டுகளும் ஏற்புடையனவே. இருந்தாலும் மிகச் சிறப்பானது அந்த மூண்றாவது பாயிண்ட்.

Unknown said...

//பல நூற்றாண்டுகளாக !

பார்ப்புகளின் தந்திரம் சப்ளையைக் குறைத்து டிமாண்டை அதிகரித்து, சப்ளையை தங்களின் ஏகபோகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததே. தேவைப்படுவோர் தங்களுக்கு வேண்டியவர் எனும்போது தம் கோவணத்தை நெகிழ்த்தி வாய்ப்பு சுண்டல் வழங்குவதே. இடப்பங்கீடு செய்தது எல்லாம் அந்த மோனோபொலிக்கு ஆப்படித்ததே.

தனியார் கல்விக்கூடங்கள் திறந்ததினால் (எப்படிப்பட்ட தரத்துடனும்) சப்ளை அதிகரித்து இன்றை ஒவ்வொரு மாநிலத்திலும் ஆயிரக்கணக்கில் காலியிடங்கள் காத்து வாங்குகின்றன.//

விளக்கத்துக்கு மிக்க நன்றி.

Unknown said...

//என்னை இந்தி படிக்க உடாம தடுத்துட்டாங்க... அதே பழைய பல்லவி.//

ஹிந்தி தெரிந்திருந்தால் வட நாட்டில் பயன்படுமே. கூடுதலாக ஒரு மொழி தெரிந்திருந்தால் நல்லதுதானே

Unknown said...

ஜெய், நல்லதில்லைன்னு யாருங்க சொன்னாங்க. இவனுங்க வேலைக்குப் போற இடத்துல இந்தி பேசனும்ங்கறதுக்காக ஒட்டு மொத்த தமிழ்நாடும் இந்தி கத்துக்கிட்டு இவனுங்ககிட்ட இந்தில தன பேசனும்னு அராஜகம் பண்றது தான் சகிக்கலை.

anandrajah said...

//ஆனால் வெறும் எட்டே மாதத்தில் விரும்பிக் கற்ற தெலுங்கு இந்தியை விட அதிகம் கை கொடுக்கிறது//.
இதைதான் எதிர்பாத்தேன். "விருப்பம்" இல்லையேல் காதல் மொழி கூட கைகூடாது. அப்புறம் மனதில் வெறுப்பை சுமந்து கொண்டு காதலிக்க முடியுமா இல்லை அதுதான் கைகூடுமா..!
-ஆனந்த ராஜ், விருதுநகர்/மும்பை.

Anonymous said...

இந்தப் பதிவில் எங்கே நான் இந்தி மொழியின் பால் காழ்ப்புணர்ச்சி தோற்றுவித்தேன் என்று தெரியவில்லை. உங்களைப் போலவே அவர் வந்து விளக்குவார் என்று நானும் காத்திருக்கிறேன்.

..

அவர் உங்களைச் சொல்லவில்லை. அரசியல்வாதிகளைச் சொல்கிறார். அரசியல்வாதிகள் நடாத்திய இந்தி எதிர்ப்புப்போராட்டம் காழ்ப்புணர்ச்சியாகத் தெரிகிறது.

ஜவஹர் போன்றவர்கள் காட்டில் இப்போது மழை.

'இந்தி படிப்போம்' என்ற கட்சிக்கொள்கையையுடைவர் எதிர்கட்சித்தலைவர் ஆகிவிட்டார்.
'பார்ப்ப்னிய் அனுதாபி' முதல்வர் ஆகிவிட்டார்.

பிறகென்ன ? இந்தி கட்டாயப்பாடமாக்கப்படும்.

Anonymous said...

@அனானிமஸ்: நிஜமாகவே ஜவஹர் போன்றவர்கள் காட்டில் மழை தான். ஏனெனில் எதைச் செய்தாலும் ஆதாயத்தைக் கணக்கிட்டே செய்கிற அவர்கள் முதல்வருக்குப் பிடித்ததைச் செய்தால் பலன் அதிகம் தானே என்று வெக்கமில்லாமல் கிளம்பிவிடுவார்கள்.

Anonymous said...

மச்சி செம பதிவு .. ரொம்பா நாளா என் மனசுல இருந்தது எல்லாம் உங்கப் பதிவுல வந்திருக்கு .. சும்மா ஹிந்திப் படிக்காம தடுத்திட்டானுங்கனு சிலர் புழம்புவது ஒரு திட்டமிட்ட ஆர்.எஸ்.எஸ் பரப்புரை அதை செய்பவர்கள் அனைவரும் ஆதிக்கச் சாதியிலும் ஒரு சின்னக் கூட்டம். எப்பிடியாவது இந்தியை நுழைச்சு, தமிழை இல்லாம பண்ணனும் ...

இந்திப் பேசும் மாநிலத்துக்குத் தான் போகணும்னு ப்ளான் பண்ற ஆளுங்க.. இந்தியப் படிக்கட்டுமே. அவனுங்க படிக்கணுமுன் என்பதற்காக 7 கோடி பேரும் இந்திப் படிக்கணுமா என்ன ? இல்லை 7 கோட் பேசும் இந்திப் படிச்சிட்டு உபி தில்லினு போகப் போறோமா? என்ன ...

இல்லை வெளியில் இருந்து வரும் 0.001 சதவீத மக்களுக்கா நாம் எல்லாரும் இந்திப் படிச்சிட்டு வாங்க வாங்க ஆயகோ, நமஸ்தேனு வரவேற்கனுமா?

என்னைக் கேட்டால் ஆங்கில வழிக் கல்வி கூட அவசியம் இல்லைங்க.. ஒரு பாடமா ஆங்கிலம் படிக்கலாம். அவ்வளவே ...

தமிழ் வழியில் படித்தவனும், ஆங்கில வழியில் படித்தவனும் .. என் கூட கனடாவில் கல்லூரியில் ஆங்கிலப் புலமை போதாதோர் வகுப்பில் ஒன்னாத் தான் குப்பைக் கொட்டினான். ஆங்கில வழிப் படித்தவுடன் ஒன்னியும் வெளிநாட்டில் வெத்திலைப் பாக்கு வைத்துக் கூப்பிடல. என்னதான் பட்லர் இங்கிலிசுல பீட்டர் விட்டாலும், இங்கே டெஸ்ட் பண்ணி இன்னொரு முறை அமெரிக்கன் இங்கிலிஸ் சொல்லித் தரானுங்க..

அப்படி இருக்க முழு ஆங்கில வழிக் கல்வி தமிழ் நாட்டில் அவசியமே இல்லீங்க ... கான்வண்ட்ல குப்பைக் கொட்டினவனின் மனக்குமுறல் தான் இது ..

சிலர் சொல்றாங்க.. தமிழ்நாடு தவிர எல்லா இடத்திலயும் ஆங்கில பேசுறானுவங்கனு.. இல்லையே கேரளாவுல போய் இந்திப் பேசுங்க.. 90 சதவீதம் யாருக்கும் இந்தி தெரியாது. அவனுங்க தமிழே நல்லப் புரிஞ்சுக்குவாங்க.. அதே நிலை தான் கர்னாடகத்திலும் ... வங்காளத்தில் கூட இந்தி அரைகுறையத் தான் பேசுறானுங்க.. கொல்கத்தா தவிர ..

நீ எந்த மாநிலத்துக்கு போறீயோ அந்த மாநிலத்தை அங்கே போய் பழகு இல்லைனா. ஸ்பெஷல் க்ளாஸ் போய் படி. அத விட்டுப்புட்டு அனைவரும் இந்திப் படி படினு சொல்றது சுத்தப் பிதற்றல் ...

இதே நிலை ஆங்கிலத்துக்கும் .. ஒரு பாடமா படிக்கலாம் .. மற்றப்படி தமிழ்நாட்டில் இருப்பவன் அனைவரும் தமிழ் படியுங்க.. அதே போல பெங்களூருல இருக்க நம்மாளுங்க.. கன்னடத்தைப் படியுங்க.. அங்கேயே குப்பை கொட்டனு எனில் மாத்தாடுங்கள் கன்னடத்தில் தவறேதும் இல்லை.

இந்தப் பதிவு பலரை சென்றடையவேண்டும் .. சகோ ..

Unknown said...

இ.செ. மிகவும் அழுத்தமான கருத்துக்களுடன் கூடிய பின்னூட்டம். ஒரு பதிவையே பின்னூட்டமாக எழுதியிருக்கிறீர்கள். ஒவ்வொரு நாளும் இந்த விளக்கத்தைப் ரெண்டு பேருக்காவது குடுக்க வேண்டியிருக்கு.

உங்க பின்னூட்டத்தில எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் “மச்சி”ன்னு சொல்லி நெருங்கி வந்தீங்க பாத்தீங்களா, அது தான். நன்றி.

chinnapiyan said...

மொத்தத்தில் எல்லாவற்றுக்கும் சுயநலமிக்க அரசியல் வாதிகள்தான் காரணம்.முன்னர் வெள்ளைக்காரன் ஆண்டான் அப்புறம் இப்போ வடநாட்டுக்காரன் ஆள்றான். அப்பையும் தமிழ்நாட்டின் ஒரு பகுதியினர் ஜால்ரா அடித்து வாழ்ந்தார்கள். இப்பயும் அப்படியே.

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan