இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Monday 26 July, 2010

குடும்பக் கோட்டைக் கனவு சிங்கம்



இது கற்பனை... கற்பனை... கற்பனையைத் தவிர வேறில்லை. எதிர்காலத்தில் இப்படி நடந்தால் அதற்குக் கம்பேனி பொறுப்பாகது.

Monday 19 July, 2010

ச்சேட்... [21-07-2010]

ஜி-டாக் லாகின் செய்த உடன் ghostblogger என்ற ஐடியிலிருந்து ச்சேட்டில் இணைத்துக் கொள்ளுமாறு ஒரு நட்புக் கோரிக்கை. இணைத்தேன். ஓரிரு நிமிடங்களில்  கோஸ்ட் ப்ளாகர் என்ற பெயருடன் ஒரு விண்டோ திறந்தது. எனக்கும் அந்த கோஸ்ட் ப்ளாகருக்கும் நிகழ்ந்த உரையாடல் கீழே.

கோஸ்ட் பிளாகர்: இணைத்தமைக்கு நன்றி

வி.கோ: நன்றி. உங்க ப்ளாக் லிங்க் குடுங்களேன். படிச்சிப் பாத்துட்டு கமெண்ட் போடுறேன்.

கோஸ்ட்: எனக்குன்னு சொந்தமா ப்ளாக் எல்லாம் கிடையாதுங்க.

வி.கோ: அப்புறம் ஏங்க கோஸ்ட் ப்ளாகர்னு பேர் வச்சிருக்கீங்க?

கோஸ்ட்: சார், கோஸ்ட் ரைட்டர் கேள்விப்பட்டதில்லையா!!!

வி.கோ: ம்ம்ம், மத்தவங்களுக்காக இவுங்க கதை, கட்டுரையெல்லாம் எழுதிக் குடுப்பாங்க

கோஸ்ட்: அதேதான். நானும் மத்தவங்களுக்காக ப்ளாக் போஸ்ட் எழுதிக் குடுப்பேன். அத அவுங்க ப்ளாகுல அவுங்களே எழுதுனதா போட்டுக்குவாங்க.

வி.கோ: நல்லா இருக்குதே இந்த அப்ரோச்

கோஸ்ட்: அப்படி எழுதித் தற்றதுக்கு கொஞ்சமா ஒரு ப்ராசசிங் ஃபீஸ் வாங்கிக்குவேன்.

வி.கோ: கொஞ்சமான்னா.... எவ்வளவு வாங்கிக்குவீங்க?

கோஸ்ட்: அது எழுதித் தற்றதப் பொறுத்து சார். 1000 வார்த்தைக்குள்ளன்னா 250 ரூ. 2500 வார்த்தைக்குள்ளன்னா 750 ரூ. உண்மைத் தமிழன் ஸ்கீம்ன்னு ஒரு ஸ்கீம் இருக்கு சார். நீங்க சொல்ற டாபிக்ல 5000 வார்த்தைக்கு மேல வற்ற மாதிரி பதிவு எழுதித் தருவேன். அதுக்கு 1500 ரூ ஆகும் சார்.

வி.கோ: ஸ்கீமெல்லாம் நல்லா இருக்கு. ஆனா இவ்வளவு ரூவா குடுத்து போஸ்ட் எழுதி வாங்கற அளவுக்கு நான் பெரிய தில்லாலங்கடி இல்லையே. நானே பொழுது போகாம பல நேரம் சும்மாத்தான் உக்காந்திருக்கேன்.

கோஸ்ட்: சார், நீங்க மிஞ்சி மிஞ்சி போனா என்ன எழுதுவீங்க. பஸ்ல போனப்போ பக்கத்துல நின்னவன் உங்க காலை மிதிச்சது. பெட்ரோல் பங்குல ஜீரோ காட்டாம பெட்ரோல் போட்டதுன்னு ச்சும்மா அரைச்ச மாவையே அரைப்பீங்க. எங்க கிட்ட புதுப் புது வெரைட்டி நெறைய இருக்கு சார்.

வி.கோ: என்னய்யா சொல்றே, கொஞ்சம் வெளக்கமா சொல்லு

கோஸ்ட்: சார், எங்க கிட்ட ஒரு ஐட்டம் இருக்கு சார். அந்த வெரைட்டில நீங்க ப்ளாக் போஸ்ட் போட்டீங்கன்னா உங்களுக்கு எதிரா ஒரு டஜன் கண்டணப் பதிவு கியாரண்ட்டி.

வி.கோ: சரி அப்படி என்னதான் எழுதுவ...

கோஸ்ட்: யாராச்சும் ஒரு பிரபலப் பதிவரப் பத்தி கண்ணா பின்னான்னு அவதூறு எழுத வேண்டியதுதான். அப்புறம் அவுங்க உங்களுக்கு எதிர்ப் பதிவு போட, நீங்க அவுங்களுக்கு பதில் பதிவு போட, உங்க ப்ளாகே கொதி கொதின்னு கொதிக்கும் சார்... ரெண்டே நாளில் நீங்கள் பிரபலப் பதிவர் ஆகிடலாம்....

வி.கோ: யோவ், அவுங்க எதிர்ப்பதிவு போடாம சைபர் கிரைமுக்குப் போயிட்டா என்ன பண்றதாம்...

கோஸ்ட்: அதுக்குத்தான், நாம பதிவு போடும் போதே கீழ புணைவுன்னு லேபிள் குடுத்துடுவோம்ல. அதையும் மீறி அவுங்க சைபர் கிரைமுக்குப் போனா, அப்பயும் நீங்க ஒரு பதிவு போடுங்க சார். மனப்பூர்வமா மன்னிப்பு கேட்டுக்குறேன். உங்க காலைத் தொட்டு மன்னிப்புக் கேட்டுக்குறேன், உங்க வீட்டுப் பெரியவுங்க காலையெல்லாம் தொட்டு மன்னிப்பு கேட்டுக்குறேன், உங்க வீட்டுக் குழந்தைங்க காலையெல்லாம் தொட்டு மன்னிப்புக் கேட்டுக்குறேன்னு ரொம்ப உருக்கமா ஒரு பதிவு போடுங்க. உங்களுக்கு எழுத வரலைன்னா அதையும் நானே எழுதித் தற்றேன்...

வி.கோ: ரொம்ப பேட் டச்சா இருக்கு. ஆனாலும் போட்டுத்தான் பாப்போமேன்னு நெனைச்சா, விழுற அடி பலமா விழுந்திடுமோன்னு வேற பயமா இருக்கே...

கோஸ்ட்: நீங்க பயப்படாம ஒரு பதிவு இது மாதிரி போட்டுப் பாருங்க. மொதல் பதிவுக்கு “0” பர்செண்ட் ப்ராசசிங் ஃபீஸ் தான். அதாவது நீங்க பணமே குடுக்க வேண்டாம். ரிசல்ட் பாத்து உங்களுக்குப் பிடிச்சிருந்தா, அடுத்தடுத்த பதிவுகளுக்கு பணம் குடுங்க போதும்.

வி.கோ: என்னமோ சொல்றே... ஆனாலும் எனக்கு பயமாவே இருக்கு...

கோஸ்ட்: டோண்ட் ஒர்ரி சார்

வி.கோ: இப்ப எதுக்கு அவரக் கூப்புடுறே

கோஸ்ட்: அய்யோ, நான் அவரப் பத்தி சொல்லல சார். கவலைப்படாதீங்கன்னு சொன்னேன்

வி.கோ: இப்பவே இவ்வளவு கலவரப்படுத்துறியேடா. சரி, நீ கோஸ்ட் பின்னூட்டம் எழுதுவியா?

கோஸ்ட்: இது கூட நல்ல ஐடியாவா இருக்கு. ஆனா ஒரு பின்னூட்டத்துக்கு 100 ரூ செலவாகுமே. அதுக்கு 250 ரூ குடுத்து பதிவே எழுதி வாக்கிடலாம்ல...

வி.கோ: வேணாம். எனக்கு 100 ரூ பெரிசில்ல. குடுத்துடுறேன். ஆனா எங்கயாவது என்னைத் திட்டிப் பதிவோ பின்னூட்டமோ போட்டுருந்தா அவங்களுக்கு பதில் பின்னூட்டம் ரெடி பண்ணிட்டு சொல்லிவிடு...

கோஸ்ட்: ஓக்கே சார்

சரியாக ஒரு வாரம் கழித்து

கோஸ்ட்: சார், [இணைப்பு] இந்த லிங்க்ல உங்களக் கண்ணாபின்னான்னு திட்டி பின்னூட்டம் வந்திருக்கு சார்

வி.கோ: அதுக்கு என்ன பண்ணலாம்னு சொல்றே

கோஸ்ட்: சும்மா 300 வார்த்தைல அதிரடியா ஒரு பின்னூட்டம் தயார் பண்ணிருக்கேன் சார்

வி.கோ: அத வச்சு என்னை என்ன பண்ண சொல்றே

கோஸ்ட்: அதே போஸ்ட்ல போய் நீங்க இந்த பின்னூட்டத்த பேஸ்ட் பண்ணுங்க சார்...

வி.கோ: சரி, என்னை அசிங்கமா திட்டிப் பின்னூட்டம் போட்ட அந்த பதிவர் யாரு...

கோஸ்ட்: அவரு பேரு __________ சார்

வி.கோ: அந்த ஆளை உனக்குத் தெரியுமா?

கோஸ்ட்: எனக்கு எப்படி சார் தெரியும்...

வி.கோ: அது தெரியாமத்தான் அவன் போட்டதா நீயே பின்னூட்டம் போட்டியாக்கும்...

கோஸ்ட்: சாஆஆஆஅர்....

வி.கோ: நாயே, அந்த பின்னூட்டம் நீ போட்டதுதான்னு எனக்கு எப்பவோ தெரிஞ்சு போச்சுடா....

கோஸ்ட்: சார் அது வந்து

வி.கோ: என்னடா வந்து நொந்து....

கோஸ்ட்: சார், எப்படி கண்டுபுடிச்சீங்கன்னாவது சொல்லுங்க சார்....

வி.கோ: ஏண்டா நாயே, பணம் வாங்கிக்கிட்டு போஸ்ட், பின்னூட்டம் எழுதித் தற்றேன்னு ஒருத்தன் அப்ரோச் பண்ணும்போதே கொஞ்சமாச்சும் அலர்ட் ஆக வேண்டாமா? அதுவுமில்லாம உன்னோட ச்சேட் பண்ணின ரெண்டாவது நாளே அப்படி ஒரு பின்னூட்டம் வந்தத நான் பாத்துட்டேன். நானா உனக்கு மெயில் அனுப்பி பதில் பின்னூட்டம் தயார் பன்னச் சொல்லுவேன்னு பாத்திருக்கே. ஒரு வாரமா வரலைன்னதும் இப்போ நீயா பாத்துட்டு சொல்ற மாதிரி ச்சேட்டுக்கு வந்து சொல்றே...

தொங்கனா கொடக்கா... நீ **** ***ட கொடக்கா... ~@~@#@! @# !@#_(#)_ %~@#_ (_ %  #$*( #)$*) *%( *#&@( @*!# &(@# &*)@#

(முந்தைய வரி பிரசூரிக்க முடியாத கெட்ட வார்த்தைகளால் நிரம்பியிருந்ததால் தனிக்கை செய்யப் படுகிறது - பிளாகர் குழு)

Saturday 17 July, 2010

தெலங்கானா - மாவட்ட வாரியான வரைபடக் கோப்புகள்
















பெரிது மற்றும் சிறிது படுத்தக் கூடிய கோடுகளால் ஆன (வெக்டர்) தெலங்கானா வரைபடங்களைத் தயாரித்துள்ளேன். தெலங்கானா ஆர்வலர்கள், பதிவர்கள், பதிப்பாளர்கள், மாணவர்கள், சிறுபத்திரிகை நடத்துவோர் மற்றும் அச்சகத்தினர் ஆகியோரின் பயன்பாட்டுக்காக இவ்வரைபடங்களைத் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். படங்களைப் பயன்படுத்த மேற்கூறியவர்களுக்கு எவ்வித நிபந்தனைகளும் கிடையாது. படங்களைப் பயன்படுத்திக் கொள்வோர் என் பெயரைக் குறிப்பிட்டு நன்றி தெரிவிக்க வேண்டிய கட்டாயம் எதுவுமில்லை. எங்களுடைய இன்ன படைப்பில் உங்கள் படங்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்று தகவல் தெரிவித்தால் அதனைத் வாங்கிப் படிக்க, சேகரித்து வைக்க ஏதுவாகும். வணிக ரீதியில் வெளிவரும் நாளேடுகள், வார, வாரமிருமுறை, மாத, மாதமிருமுறை, ஆண்டு, அரையாண்டு, காலாண்டு ஏடுகள் எதுவும் இவற்றைப் பயன்படுத்த எக்காலத்திலும் அனுமதி கிடையாது.

தமிழ் மற்றும் ஆங்கில வடிவங்களின் வரைபடங்களை ai (adobe illustrator), eps (encapsulated post script, மற்றும் pdf வடிவங்களில் தனித் தனி zip கோப்புகளாக இங்கே இணைத்துள்ளேன். ஆங்கில வரைபடத்தில் பயன்படுத்தியுள்ள Arial Black மற்றும் Arial எழுத்துருக்கள் அனைத்துக் கணிணிகளிலும் நிறுவப்பட்டிருக்கும் என்பதால் அந்த எழுத்துருக்கள் இணைக்கப் படவில்லை. தமிழ் வரைபடத்தில் பயன்படுத்தியுள்ள TAM3.ttf எழுத்துருவை மட்டும் இணைத்துள்ளேன். படங்கள் வேண்டுவோர் தாராளமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம்.

[தெலங்கானா வரைபடங்கள் - தமிழில் 1.59 MB]      [தெலங்கானா வரைபடங்கள் - ஆங்கிலத்தில் 1.64 MB]

Saturday 10 July, 2010

பால் இங்க்கா மணி - கெலுபு எவரிகி

வழக்கமாக இரவு உணவின் போது துணைக்கு எவராவது இருந்தால் தொலைக்காட்சியைக் கவனிக்க மாட்டேன். இன்று தனியாக உணவு உண்ண வேண்டிய நிலையிலிருந்ததால் தொலைக்காட்சியைக் கவனித்தபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

தெலுங்கு செய்தி அலைவரிசை ஒன்றில் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் பற்றிய ஆரூடங்கள் குறித்த செய்தி ஓடிக் கொண்டிருந்தது. ஜெர்மனியைச் சேர்ந்த பால் என்கிற கடல்வாழ் உயிரியையும், சிங்கப்பூரைச் சேர்ந்த மணி என்கிற ஜோதிடக் கிளியைக் குறித்தும் சொல்லிக் கொண்டிருந்தனர்.

ஜெர்மனியில் உள்ள கடல் உயிர் அருங்காட்சியகம் ஒன்றின் பராமரிப்பில் இருக்கிறது பால் என்கிற ஆக்டோபஸ். இதுவரை ஆறு அரையிறுதிப் போட்டிகளின் முடிவுகளையும் துல்லியமாகக் கூறியுள்ளது. கடைசியாக ஜெர்மனி தோற்றுப் போகும் என்பதைக் கணித்துச் சொன்ன பிறகு பாலின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. தீவிர ஜெர்மனி கால்பந்தாட்ட ரசிகர்கள் “பாலை வறுத்து சாப்பிட வேண்டும்” “அதை சூப் வைத்துக் குடிக்க வேண்டும்” என்று கொலை வெறியோடு கருத்துக் கூறி வருகிறார்கள். இதையடுத்து பிராணிகள் நல அமைப்புகள் பாலை ஆழ்கடல் பகுதிக்குக் கொண்டு சென்று விட்டுவிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

சிங்கப்பூரைச் சேர்ந்த இந்தியர் முனியப்பா கிளி ஜோதிடம் பார்ப்பவர். அவர் வளர்க்கிற மணி என்கிற கிளியும் பால் சொன்னது போலவே இதுவரை நடந்த போட்டிகளின் முடிவுகளைக் குறித்து துல்லியமாகச் சொல்லி வந்திருக்கிறது. மணி ஒருமுறை சீட்டெடுக்க இதுவரை 15 சிங்கப்பூர் டாலர்களைக் கட்டணமாக வாங்கி வந்த முனியப்பா இப்போது வாங்குவது 300 சிங்கப்பூர் டாலர்கள்.

ஜெயிக்கிற அணிகள் மீது பந்தயம் கட்ட விரும்புகிறவர்கள் மணியை மொய்க்கின்றனர். இதுவரை பால் கூறிய அதே முடிவுகளை மணியும் ஒன்று போலவே கூறிவந்தது. இப்போது இருவரும் இறுதிப் போட்டியில் மோத இருக்கிற எதிரெதிர் அணிகளைக் கை காட்டுகிறார்கள். பால் ஸ்பெயின் தான் என்று கூறுகிறது, மணியோ நெதர்லாந்து அணிதான் என்று கூறுகிறது.

ஜோதிடத்தை நம்புகிறவர்கள் பலரும் இந்த ஆருடத்தை வரவேற்கலாம், நம்பலாம். ஆனால் இப்போதும் பகுத்தறிவுதான் வென்றிருக்கிறது. இது போன்ற ஆருடங்கள் உண்மையாய் இருந்திருந்தால் இம்முறையும் பால் கூறிய முடிவையே மணியும் கூறியிருக்க வேண்டும் அல்லது மணியின் முடிவையே பாலும் கூறியிருக்க வேண்டும். இவை இரண்டும் இப்போது முரண்படுவதிலேயே தெரிகிறது இதுவரை இவை கூறி வந்த முடிவுகள் தற்செயலானவையே என்று. கணிதத்தில் வரும் ப்ராபபிலிட்டி தான் இதன் அடிப்படை.

ஆடுகிற இரண்டு அணிகளில் எது வெற்றி பெரும் என்று கேட்டால் இரண்டில் ஒன்றைத்தான் சொல்ல முடியும். மூண்றாவதாக இன்னொன்றைச் சொல்லிவிட முடியாது. அப்படிச் சொல்லப்பட்ட அணி வெற்றி பெறவும் வாய்ப்பிருக்கிறது. இதே ஆக்டோபசிடமோ கிளியிடமோ இறுதிப் போட்டியில் எந்த இரு அணிகள் மோதும் என்று அரையிறுதிகளின் ஆரம்பத்துக்கு முன்பு ஆரூடம் கேட்டிருந்தால் தெரிந்திருக்கும் செய்தி!

பாலைப் பொறிக்கப் போறாங்களா மணிய குருமா வைக்கப் போறாங்களா என்று திங்கட்கிழமை விடிந்தால் தெரிந்துவிடும். அது வரை பொறு மனமே!!!

Monday 5 July, 2010

”குடி” மரியாதை

வார இறுதி நாட்களில் சரக்கடிப்பதும், சரக்கடித்த பிறகு பொழுது போகாமல் இணையத்தில் உலாவுவதும் சகஜம் தான் என்றாலும், அவ்வாறான நேரத்தில் செய்யக் கூடாத பத்து விஷயங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. சுயநினைவில் இல்லாத போது செய்தவை சுயநினைவுக்கு வந்த பிறகு உங்களைத் துன்புறுத்தக் கூடாதல்லவா?

1. நீங்கள் சரக்கடித்த பிறகு கட்டுப்பாட்டுடன் இருப்பதில் வீராதி வீரராக அல்லது சூராதி சூரராக இருந்தாலும் பணியிடத்திற்குத் தொடர்புடைய மின்னஞ்சல்களையோ இணைய உரையாடல்களையோ தவிர்ப்பது நல்லது.

2. வார இறுதிப் போதை வேளையில் இணைய தொடர்பிலிருக்கக் கூடிய நண்பர்களிடம் உரையாடாமல் இருப்பதும் நலம். அப்படியே உரையாட நேர்ந்தாலும் எந்த விதமான வாக்குறுதிகளும் கொடுக்காதீர்கள். இன்ன நேரத்தில் இன்ன இடத்தில் உங்களைச் சந்திக்கிறேன் என்று நீங்கள் உறுதியளித்தது உங்களுக்கே நினைவிலில்லாமல் போகலாம்.

3. சரக்கு போதையில் இருக்கும் போது உங்கள் மின்னஞ்சல் கணக்குகள் மற்றும் இதர பயணர் கணக்குகளின் கடவுச் சொற்களை மாற்றாதீர்கள். முக்கியமாகப் பதிவுகளுக்குப் பின்னூட்டம் போடாதீர்கள். கவனக் குறைவாக உங்கள் பயணர் பெயரையும் கடவுச் சொல்லையும் அதற்குள்ள பெட்டிகளில் அல்லாமல் பின்னூடம் எழுதும் பெட்டியில் போட்டுவிடுவீர்களேயானால், நீங்கள் அவற்றை நிரந்தரமாக இழந்துவிடும் அவலமும் நேரலாம்.

4. அழகான பொருட்களை இணையத்தில் பார்த்துவிட்டு அவற்றை வாங்குகிறேன் பேர்வழி என்று உங்கள் கடன் அட்டையையோ ஆன்லைன் வங்கிக் கணக்கையோ பயன்படுத்தி அவற்றை வாங்க முயற்சிக்காதீர்கள். ஏனெனில் அது உங்களுக்குத் தேவையா இல்லையா என்று முடிவு செய்யும் நிலையில் நீங்கள் இல்லை.

5. உங்கள் புஜபல பராக்கிரமத்தைக் காட்டுகிறேன் பேர்வழி என்று உரையாடல் பெட்டியின் ஸ்டேட்டசில் என்ன சரக்கு, எத்தனை லார்ஜ் போன்றவற்றை எழுதாதீர்கள். பிரிண்ட் ஸ்கிரீனுடன் பதிவுலக நண்பர்களால் கலாய்க்கப்படுவீர் ஜாக்கிரதை.

6. நீங்கள் பயன்படுத்துவது உங்கள் வீட்டிலுள்ள அனைவருக்குமான பகிர் கணிணி என்றால் போதை நேரங்களில் அதில் ஆபாசக் காட்சிகளையோ படங்களையோ தரவி்றக்காதீர்கள். உங்கள் தனிப்பட்ட கணிணியாகவே இருந்தாலும் இவ்வாறான செயல்களைத் தவிர்த்துவிடுங்கள்.

7. ஏதாவது காரணங்களால் மனஸ்தாபத்தில் இருக்கிற நண்பர்களை இது போன்ற நேரத்தில் உரையாடல் பெட்டியில் காண நேர்ந்தால் அவர்களை உரையாடலுக்கு அழைக்காதீர்கள். நீங்கள் சொல்லுகிற ஹாய், ஹலோ, வணக்கம் நண்பா, போன்றவை கூடத் தவறான அர்த்தத்தில் புரிந்துகொள்ளப்படும் சாத்தியம் உள்ளது.

8. எதிர்பாலினரை உரையாடல் பெட்டியில் காண நேர்ந்தாலோ அல்லது அவர்கள் உங்களை உரையாட அழைத்தாலோ கவனமாகத் தவிர்த்து விடுங்கள். ஏனெனில் இது நீங்கள் உண்மை விளம்பியாக உருவெடுத்திருக்கும் நேரம். உண்மை எல்லா நேரமும் இனிக்காது!!!

9. எக்காரணத்தை முன்னிட்டும் உரையாடல் பெட்டி வழியாகக் கடன் கேட்காதீர்கள். நீங்கள் கடன் கொடுத்தவர்களிடமும் திருப்பியும் கேட்காதீர்கள். அதற்கான முறையான வழி நேரில் கேட்பது அல்லது தொலைபேசியில் கேட்பது. அதையும் நீங்கள் போதையிலிருக்கிற நேரத்தில் கேட்க வேண்டாம்.

10.  மறந்துபோன மறைத்து வைத்திருக்கும் காழ்ப்புணர்ச்சி சுதந்திரமாக வெளி வரும் நேரம் எனவே உங்கள் மீது காண்டில் இருக்கும் அல்லது நீங்கள் காண்டில் இருக்கும் நபர்களுடன் ச்சேட்ட வேண்டாம்!!!


நன்றி: டாப்-10ல் 7 என்னுடையவை, மீதம் 3ஐத் தந்துதவிய கடை-மூண்று-வள்ளல் லதானந்தருக்கு நன்றி.இதில் அவருடைய மூண்று எதுவென்று சரியாகக் கண்டுபிடிக்க முடிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

Thursday 1 July, 2010

ஒரு வேண்டுகோள்



டியர் ”பீ”ரு,

உங்கள் “வாரெ வா” போஸ்ட்டைப் படித்தேன். அதில் ரஞ்சிதாவுக்கு நீங்கள் சொல்லியிருந்த தண்டனை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. ஏனெனில் நானும் நித்தியால் ஏமாந்தவன். என்ன செலவானாலும் பரவாயில்லை, இதை செய்து பார்த்துவிடுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். தேங்க்ஸ் “பீ”ரு. யூ ஆர் த அல்மைட்டி ஆஃப் மை யூனிவர்ஸ்.

எச்சகலை,
எடின்பர்க்


எடின்பர்க் எச்சக்கலை,

பொதுவில் இந்த மாதிரி கடிதங்களை நான் எனது மின்னஞ்சல் பெட்டியிலிருந்து அழித்துவிடுவேன். ஆறு நாளாக எதுவும் எழுதாததாலும், இன்றைக்கும் எழுத எந்த விஷயமும் கிடைக்காததாலும் உங்கள் கடிதத்தைப் பிரசூரிக்க வேண்டியதாகிவிட்டது.

தமிழ்ச் சூழலில் இருக்கக் கூடிய ஆகப் பெரிய அவலமாக உங்கள் கடிதத்தைத் தான் சொல்ல வேண்டும். ஒரு எழுத்தாளன் சிந்தித்து நல்ல விஷயம் ஒன்றைச் சொன்னால், அவனுக்கு முன்னால் அதை அனுபவித்துப் பார்த்துவிட வேண்டும் என்று நினைக்கிறது எந்த வகையில் நியாயம். “என்ன செலவானாலும் செய்து பாத்துவிடனும்” என்று உங்கள் பணத்திமிரைக் காட்டுகிறீர்களா?

நியாயமாக ரஞ்சிதாவுக்கு அந்த தண்டணையை நான் தான் தொடங்கி வைக்க வேண்டும். இதை உத்தமத் தமிழ் எழுத்தாளன் கூட ஒப்புக் கொள்வான். அந்த அளவுக்கு நான் நித்தியால் பாதிக்கப் பட்டிருக்கிறேன்.

ஒரு எழுத்தாளன் இத்தகைய சந்தோஷத்தை அனுபவிக்க எவ்வளவு செலவாகும் என்பது நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது. ஈசிஆரில் காட்டேஜுக்கு மட்டுமே ஒரு நாளைக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கு மேல் போகும். உடன் ப்ளாக் லேபிள் இருபது லார்ஜாவது உள்ளே போக வேண்டும். ப்ளாக் லேபிளுக்கு ரஞ்சிதாவை மட்டுமா தொட்டுக் கொள்ள முடியும்? இதல்லாமல் ரஞ்சிதாவுக்கு அமெரிக்காவிலிருந்து இங்கே வந்து செல்ல ஃப்ளைட் டிக்கெட் வேறு லட்சக்கணக்கில் போகும். ஒரு எழுத்தாளனை மகிழ்விக்க அவனது வாசகர்களில் ஐந்நூறு பேர் ஆளுக்கு ஐந்நூறு டாலர்களைச் செலவழித்தால் என்ன குறைந்துவிடுமாம்?

எப்படியும் என் வாசகர்கள் நான் எதிர்பார்க்கிற தொகையைத் திரட்ட உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ரஞ்சிதாவுக்குத் தண்டனையை நிறைவேற்றிவிட்டு நான் என்ன ஓடியா போகப் போகிறேன்? அடுத்த நாள் தண்டனையை எப்படிக் கொடுத்தேன் என்பதையும் என் ப்ளாகில் எழுதத்தான் போகி்றேன். என்ன, பைபாசுக்குப் பிறகு ”எதை செய்வதானாலும் வைல்டா செய்யாதிங்க மைல்டா செய்யுங்க” என்று டாக்டர் வேறு அறிவுறுத்தியிருக்கிறார். அது ஒன்று தான் நெருடுகிறது.

”பீ”ரு

1/7/2010 3:10 am



எனது ஐசிஐசிஐ வங்கிக் கணக்கு விபரங்கள்:

"பீ." அறிவழகு சுந்தரம்
ஐசிஐசிஐ வங்கி, மந்தைவெளி கிளை

கணக்கு எண்: 4710004812217
ஐ.எஃப்.எஸ்.சி. எண்: ICICI400317

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan