டிவில அம்மன் கோயில் கிழக்காலே படம் ஓடிக்கிட்டிருந்துச்சு. புள்ளைய தொட்டில்ல போட்டு ஆட்டிட்டு அப்பத்தான் வந்து உக்காந்தேன். அதுக்குள்ள க்ளைமேக்சே வந்திருச்சு. சரி வந்தது வந்துட்டோம் இதையாவது பாத்துருவோம்னு உக்காந்தேன்.
ராதா ஜெயிலுக்குப் போயிட்டு அப்பத்தான் திரும்பி வந்தாங்க. நம்ம கேப்-10 வந்து பாக்காத ஏக்கத்துல அவுங்க விஷ பாட்டில தெறக்கறாங்க. அன்னாந்து குடிக்கப் போன நேரத்துல நம்ம கேப்-10 “கண்மணீ.......”ன்னு ஒரு சவுண்டு குடுக்கறாரு.
சரியா அதே நேரம் பின்னாலேந்து ஒரு சத்தம்.
என்ன கொடுமை சார் இது? இதுங்க ஒன்னு சேந்த சந்தோசத்துல சத்தம் போட்டு எம் புள்ளைய எழுப்பிருச்சுங்க....
9 மறுமொழிகள்:
என்னங்க ரொம்ப நாளா கானோம்?
என்னங்க ரொம்ப நாளா கானொம்?
ரொம்ப பிஸியோ?
சார், நீங்க மொத தடவையா வற்றீங்க. ஆனா பல வருஷமா பழகின மாதிரி ரொம்ப நாளா கானோமே... பிசியான்னு பாசமா கேட்டீங்க பாருங்க... தொட்டுட்டீங்க சார்... மனச...
அன்பின் விஜய்கோபால்சாமி,
தூங்கற புள்ளய எழுப்பறாங்களா ? சும்மாவா வுட்டீங்க
அன்பின் விஜய்கோபால்சாமி,
என்னாது - தூங்கற புள்ளய எழுப்பறாங்களா ? சும்மாவா வுட்டீங்க அவங்கள ?
பெரியவுங்கள்ளாம் இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளமாக்கிடுறீங்களே...
அந்த நேரத்துல இதுங்க மேல கேஸ் போடலாமான்னு ஒரு யோசனை கூட வந்துச்சு. கோவத்தக் கொறைக்க ஐ-பாட எடுத்து காதுல மாட்டுனேன். ஆன் பண்ணுனா பாட்டு மொத நாள் பாஸ் பண்ண எடத்துலேந்து ஓடுச்சு. “இது கோர்ட்டுக்குப் போனா ஜெயிக்காது”....
//பெரியவுங்கள்ளாம் இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளமாக்கிடுறீங்களே.../
ஒரு டீவிக்கு இவ்வளவு கொழுப்பா. உடைங்க அதை
புள்ளைன்னா சும்மாவா..:)
கேபிள் சங்கர்
Post a Comment