இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Thursday 1 July, 2010

ஒரு வேண்டுகோள்



டியர் ”பீ”ரு,

உங்கள் “வாரெ வா” போஸ்ட்டைப் படித்தேன். அதில் ரஞ்சிதாவுக்கு நீங்கள் சொல்லியிருந்த தண்டனை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. ஏனெனில் நானும் நித்தியால் ஏமாந்தவன். என்ன செலவானாலும் பரவாயில்லை, இதை செய்து பார்த்துவிடுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். தேங்க்ஸ் “பீ”ரு. யூ ஆர் த அல்மைட்டி ஆஃப் மை யூனிவர்ஸ்.

எச்சகலை,
எடின்பர்க்


எடின்பர்க் எச்சக்கலை,

பொதுவில் இந்த மாதிரி கடிதங்களை நான் எனது மின்னஞ்சல் பெட்டியிலிருந்து அழித்துவிடுவேன். ஆறு நாளாக எதுவும் எழுதாததாலும், இன்றைக்கும் எழுத எந்த விஷயமும் கிடைக்காததாலும் உங்கள் கடிதத்தைப் பிரசூரிக்க வேண்டியதாகிவிட்டது.

தமிழ்ச் சூழலில் இருக்கக் கூடிய ஆகப் பெரிய அவலமாக உங்கள் கடிதத்தைத் தான் சொல்ல வேண்டும். ஒரு எழுத்தாளன் சிந்தித்து நல்ல விஷயம் ஒன்றைச் சொன்னால், அவனுக்கு முன்னால் அதை அனுபவித்துப் பார்த்துவிட வேண்டும் என்று நினைக்கிறது எந்த வகையில் நியாயம். “என்ன செலவானாலும் செய்து பாத்துவிடனும்” என்று உங்கள் பணத்திமிரைக் காட்டுகிறீர்களா?

நியாயமாக ரஞ்சிதாவுக்கு அந்த தண்டணையை நான் தான் தொடங்கி வைக்க வேண்டும். இதை உத்தமத் தமிழ் எழுத்தாளன் கூட ஒப்புக் கொள்வான். அந்த அளவுக்கு நான் நித்தியால் பாதிக்கப் பட்டிருக்கிறேன்.

ஒரு எழுத்தாளன் இத்தகைய சந்தோஷத்தை அனுபவிக்க எவ்வளவு செலவாகும் என்பது நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது. ஈசிஆரில் காட்டேஜுக்கு மட்டுமே ஒரு நாளைக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கு மேல் போகும். உடன் ப்ளாக் லேபிள் இருபது லார்ஜாவது உள்ளே போக வேண்டும். ப்ளாக் லேபிளுக்கு ரஞ்சிதாவை மட்டுமா தொட்டுக் கொள்ள முடியும்? இதல்லாமல் ரஞ்சிதாவுக்கு அமெரிக்காவிலிருந்து இங்கே வந்து செல்ல ஃப்ளைட் டிக்கெட் வேறு லட்சக்கணக்கில் போகும். ஒரு எழுத்தாளனை மகிழ்விக்க அவனது வாசகர்களில் ஐந்நூறு பேர் ஆளுக்கு ஐந்நூறு டாலர்களைச் செலவழித்தால் என்ன குறைந்துவிடுமாம்?

எப்படியும் என் வாசகர்கள் நான் எதிர்பார்க்கிற தொகையைத் திரட்ட உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ரஞ்சிதாவுக்குத் தண்டனையை நிறைவேற்றிவிட்டு நான் என்ன ஓடியா போகப் போகிறேன்? அடுத்த நாள் தண்டனையை எப்படிக் கொடுத்தேன் என்பதையும் என் ப்ளாகில் எழுதத்தான் போகி்றேன். என்ன, பைபாசுக்குப் பிறகு ”எதை செய்வதானாலும் வைல்டா செய்யாதிங்க மைல்டா செய்யுங்க” என்று டாக்டர் வேறு அறிவுறுத்தியிருக்கிறார். அது ஒன்று தான் நெருடுகிறது.

”பீ”ரு

1/7/2010 3:10 am



எனது ஐசிஐசிஐ வங்கிக் கணக்கு விபரங்கள்:

"பீ." அறிவழகு சுந்தரம்
ஐசிஐசிஐ வங்கி, மந்தைவெளி கிளை

கணக்கு எண்: 4710004812217
ஐ.எஃப்.எஸ்.சி. எண்: ICICI400317

2 மறுமொழிகள்:

Anonymous said...

அது ஒரு திருந்தாத ஜென்மம். இப்படி எத்தனை பேர் பதிவு போட்டாலும் அது திருந்தப் போறதில்லை.

வேற வேலை இருந்தா பாருங்க போங்க.

வால்பையன் said...

ஹாஹாஹா!

சூப்பர்!

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan