இதைக் குறித்து சோனெட் அவர்கள் கூறுகையில்:
”நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் வன்புணர்வுக்காளான ஒரு பெண்ணைச் சந்திக்க நேர்ந்தது. கண்களில் ஒளியிழந்து சுவாசிக்கும் பிணம் போல் கிடந்தாள். மிகுந்த சிரமத்துடன் பேசினாள்.
”எனக்கு மட்டும் பெண்ணுறுப்பில் பற்கள் இருந்திருந்தால்...”
வெறும் இருபது வயது மருத்துவ ஆராய்சியாளரான என்னால் என்ன செய்துவிட முடியும். உன்னைப் போல் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிச்சயம் ஏதாவது செய்வேன் என்று உறுதி மட்டும் தான் கொடுக்க முடிந்தது. அந்த உறுதிக்குச் செயல் வடிவம் தருவதற்குள் நாற்பது ஆண்டுகள் உருண்டு மறைந்துவிட்டன.”
இந்த சாதனத்துக்கு ரேப்-ஏக்ஸ் (RapeAxe) என்று பெயரிட்டிருக்கிறார்கள். உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் நடைபெறும் இந்த வேளையில் பல்வேறு தென்னாப்பிரிக்க நகரங்களைச் சேர்ந்த பெண்களிடம் இந்த சாதனத்தை விநியோகித்து வருகிறார் மருத்துவர் சோனெட்.
உதிரப் போக்கிற்காக அணிகிற டேம்ப்போன் சாதனம் போன்றது தான் இதுவும். இதை அணிந்திருக்கிற பெண்ணை வன்புணர முயற்சிக்கிறவரின் ஆணுறுப்பைச் சுற்றி இதிலுள்ள பற்கள் இறுகத் தொடங்கும்.
மருத்துவர் ஒருவரின் உதவியில்லாமல் குற்றவாளியின் ஆணுறுப்பை அதிலிருந்து விடுவிக்க இயலாது. ஆணுறுப்பு இதனுள் சிக்கியிருக்கும் போது குற்றவாளியால் சிறுநீர் கழிக்கவோ நடக்கவோ கூட முடியாது. வலியில் உயிரே போய் விடும். ஆனாலும் இதனால் தோலின் மேற்புறத்தில் கிழிசல்களோ ரத்தக் காயங்களோ ஏற்படாது, என்றும் கூறுகிறார்.
பெண்கள் சிறப்பு மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் உளவியல் நிபுனர்களைக் கலந்தாலோசித்து இதனை வடிவமைத்திருக்கும் சோனெட், தனது வீடு மற்றும் வாகனத்தையும் விற்றுக் கிடைத்த பணத்தில் இது போன்ற முப்பதாயிரம் சாதனங்களைச் சோதனைக்கு விட்டுள்ளார்.
பெண்கள் டேட்டிங் செல்லும் போதோ அல்லது பழக்கமில்லாத இடங்களுக்குச் செல்ல வேண்டிய தருணத்திலோ இந்த சாதனம் மிகவும் பயணுள்ளதாக இருக்கும் என்கிறார் இரு மகள்களுக்குத் தாயாக இருக்கக் கூடிய சோனெட்.
ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக சிறை தண்டனை அடைந்துள்ள பாலியல் வல்லுறவுக் குற்றவாளிகள் பலரிடம் இக்கருவி குறித்து முன்பே தெரிந்திருந்தால் இக்குற்றத்தைச் செய்வதற்கு யோசித்திருப்பீர்களா? என்ற கேள்வி முன்வைக்கப்படது. அவர்களில் சிலர் மௌனமாக ஆமோதிக்கவும் செய்தனர்.
இந்த சாதனத்தைக் குறித்துக் கண்டனங்களும் எழாமலில்லை. இந்த சாதனத்தை அணிந்திருக்கிற ஒருவர் எப்போது வேண்டுமானாலும் தன் மீது பாலியல் தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சத்துடனேயே இருக்க நேரிடும். மேலும் இக்கருவி வன்புணர்வைத் தடுத்துவிட்டாலும் எதிர்பாராத தாக்குதலினால் ஏற்படக் கூடிய உளவியல் பாதிப்புகளிலிருந்து எவ்வாறு காப்பாற்றும் என்றும் கேள்விகள் எழுந்த வன்னமுள்ளன.
பாதிக்கப் பட்டவர்களுக்குக் குறைந்தபட்ச நீதியாவது கிடைக்கும் என்பது தான் இந்தச் சாதனத்துக்கு ஆதரவாக வைக்கப்படும் ஒரே கருத்து.
வன்புணர்விலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஆப்பிரிக்கப் பெண்கள் பல ஆபத்தான முறைகளைக் கையாளுகின்றனர். உடம்புடன் ஒட்டி இருக்கக் கூடிய மிக இறுக்கமான உள்ளாடைகளை அணிவதும், ஸ்பாஞ்சுகளுக்குள் ப்ளேடுகளை வைத்து அதைப் பெண்ணுறுப்பில் வைத்துக் கொள்வதும் ஆப்பிரிக்கப் பெண்களிடம் வெகு சகஜமாகிவிட்டன. பாலியல் குற்றம் செய்ய நினைக்கிறவர்களை ஒரு கணமாவது யோசிக்க வைத்தால் அதுவே இந்த மருத்துவ சாதனத்தின் வெற்றி என்கிறார் சோனெட்.
[ஆங்கிலக் கட்டுரை இங்கே இருக்கிறது. என்னுடைய ஆங்கில அறிவு ஓரளவுக்காவது தேறுமா தேறாதா என்று யாரேனும் இதையும் அதையும் ஒப்பிட்டுச் சொன்னால் “வளர நன்னி”. பதிவு நன்றாக இருக்கிறது, நபநப, அருமையான பகிர்வு, போன்ற வழக்கமான பின்னூட்டங்களை ஒதுக்கிவைத்துவிட்டு பதிவின் உள்ளடக்கத்தை ஒட்டி விவாதிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.]
1 மறுமொழிகள்:
ஆண் குழந்தை பிறக்கும் போதே வன்புணர ஆசைபட்டால் அந்து விழுகிற மாதிரி எதாவது பண்ணி வச்சிரணும் தல!
Post a Comment