சென்னைக்குச் செல்லும் போது பெரும்பாலும், மதிமாறன் அவர்களைச் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தாலும் அவருடைய இல்லத்திற்கு இதுவரை சென்றதில்லை. இரங்கல் தெரிவிக்க அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவரும் இதையே தெரிவித்தார். அவருடைய தாயார் இருந்த காலத்தில் அவர் வீட்டுக்குச் சென்று வர இயலாமல் போனது குறித்துப் பெரிதும் வருந்துகிறேன்.
புற்றுநோய் பாதிப்புக்காகத் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த அவர் கடந்த திங்களன்று [27/12/2010] வலிகளிலிருந்து விடுபட்டு இயற்கை எய்தினார். ஒருவரின் இருப்பைவிட அவருடைய இழப்பு ஏற்படுத்துகிற வெறுமை தாங்கிக் கொள்ள முடியாதது. ஆயிரம் வார்த்தைகளில் ஆறுதல் சொன்னாலும் எதைக் கொண்டும் இந்த இழப்பை ஈடு செய்து விட முடியாது. இந்தத் துயரத்திலிருந்து விடுபட்டு முன்பு போல் தொடர்ந்து இயங்க வேண்டுமென அவரையும் அவரது தந்தையாரையும் கேட்டுக் கொள்கிறேன்.
12/27/2010 11:55:00 am
Unknown
Posted in: 

1 மறுமொழிகள்:
நண்பர் மதிமாறன் அவர்களுடைய தாயார் காலமான செய்தியை அவருடைய வலைத்தளத்தின் பின்னூட்டம் வாயிலாக அறிந்தேன். அவருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
\\
நானும் கேட்டுக்கொள்கிறேன்
Post a Comment