இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Monday 25 October, 2010

ரக்த சரித்ரா - பழி வாங்குதல் பரிசுத்தமான உணர்வு

பரித்தாள ரவி
இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் “ரக்த சரித்ரா” திரைப்படத்திற்கு ஆந்திர மாநிலத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பரித்தாள ரவி, ஒபுல் ரெட்டி, மற்றும் சூரி ஆகியோரைச் சுற்றி நகர்கிறது கதை. இவர்களில் பரித்தாள ரவி ராயலசீமைப் பகுதியைச் சேர்ந்த தாதா. பிற்காலத்தில் ஆந்திர அரசியலையும் இவர் விட்டு வைக்கவில்லை. ஒபுல்ரெட்டி ராயலசீமைப் பகுதியைச் சேர்ந்த இன்னொரு தாதா. ஓபுல்ரெட்டியின் தூரத்து உறவினர் மாதல்லசெருவு சூர்யநாராயணா எனப்படும் சூரி.

இவர்களில் பரித்தாள ரவியாக இந்தி நடிகர் விவேக் ஓபராயும், சூரியாக நடிகர் சூர்யாவும் நடித்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் பரித்தாள ரவி “ப்ரதாப் ரவி”யாகவும் ஒபுல்ரெட்டி “புக்காரெட்டி”யாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

மாதல்லசெருவு
சூர்யநாராயண ரெட்டி (சூரி)
படத்தில் சிவாஜிராவ் என்ற கதாபாத்திரம் சூரியை வைத்து புக்காரெட்டியைக் கொலை செய்யத் திட்டமிடுவது போன்ற காட்சி சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. இதில் சிவாஜிராவ் கதாபாத்திரத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவ் என்றும் கூறப்படுகிறது.

மறைந்த என்.டி.ஆரின் மனைவி லக்‌ஷ்மி சிவபார்வதி ராம்கோபால் வர்மா மீது வழக்குத் தொடுக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார். “என்.டி.ஆர் தெலுங்கு மக்களின் பெருமைக்குரிய ஆளுமை. அவர் ரவுடியிசத்தை ஆதரிப்பது போன்று சித்தரிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ராம்கோபால் வர்மா என்ற சைக்கோ தொடர்ந்து இது போன்ற படங்களையே எடுத்து வருகிறார்” என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

இது குறித்துத் தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவிக்கையில் “என்.டி.ஆர். தெலுங்கு மக்களின் ஆதர்ச நாயகன். அவரை அவதூறு செய்வதை எந்த வகையிலும் மன்னிக்க முடியாது. என்.டி.ஆரை அவதூறு செய்கிற அந்தக் காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ராம்கோபால் வர்மா தனது முந்தைய பத்திரிகையாளர் சந்திப்புகளில் பரித்தாள ரவி, ஒபுல்ரெட்டி, சூரி, இந்த மூவரின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை இது என்று சொல்லி வந்தார். தற்போதைய சர்ச்சைகளுக்குப் பிறகு மேற்சொன்ன மூவருக்கும் இடையிலான குடும்பப் பகைதான் கதையின் அடிநாதம் என்று கூறுகிறார்.
சர்ச்சைக்குரிய சிவாஜிராவ் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பவர் இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹா. இது குறித்து ராம் கோபால் வர்மா தரப்பிலிருந்து “என்.டி.ஆர். ரசிகர்களைப் புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. சத்ருகன் சின்ஹா வருகிற பகுதி முழுவதும் கற்பனை என்ற போதிலும் இதனால் பலர் மனம் புண்பட்டிருக்கிற காரணத்தால் அந்தக் காட்சிகள் நீக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்து.

Sunday 17 October, 2010

ஏமண்ட்டிவி ஏமண்ட்டிவி...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan